• July 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 5 பேரிடமும் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு ஜூன் 27-ம் தேதி தரிசனத்துக்காக நிகிதா என்ற பெண் சென்றுள்ளார். அப்போது அவரது நகை காணாமல் போனது குறித்த புகாரில் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கென தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *