• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பள்​ளி​களில் கணிதம், அறி​வியல் ஆசிரியர்​கள் உடற்​கல்வி பாட​வேளையை கடன் வாங்​காதீர்​கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் 2024-25ம் கல்​வி​யாண்​டில் நடை​பெற்ற சர்​வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவி​லான விளை​யாட்டு போட்​டிகளில் பதக்​கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்​றிதழ் வழங்​கும் விழா சென்னையில் நேற்று நடை​பெற்​றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து மாணவர்​களுக்கு சான்​றிதழ்​களை வழங்​கி​னார். பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் தொடங்​கப்​பட்ட ஆற்​றல் ​மிகு உடற்​கல்வி திட்​டத்​தின் கீழ், மாணவர்​களின் நல்​வாழ்வை உறு​திபடுத்​து​வதை நோக்​க​மாக கொண்டு ‘உடற்​கல்வி ஆசிரியர் வளநூல்’ எனும் புத்​தகத்தை 3 தொகு​தி​களாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வெளியிட்டார். முதல் பிர​தியை பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பெற்​றுக்​கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *