
சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் உட்பட 4 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சென்னையில் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்குகிறது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது.