
புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் மூன்று ஏஎச்-64இ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திடம் நேற்று ஒப்படைத்தது. இந்திய விமானப் படைத் திறனை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் வரவு பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்காக, இந்திய அரசு மற்றும் போயிங் நிறுவனத்துக்கு இடையே ரூ.4,618 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.