
அரியலூர்: அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. இதை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைவழங்கி இருக்கிறார்.
எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து, அந்த இடத்தை நிரப்புவது பாஜகவின் கனவு என்று, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியிருக்கிறார்.