
சென்னை: புரசைவாக்கம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் முன்பு விழுந்த மரத்தை வருவாய்த் துறையினர் அகற்றாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் 2 அலகுகள் கொண்ட இ-சேவை மையம் மற்றும் ஒரு ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்துக்கு தினமும் 150-க்கும் மேற்பட்டோர் வந்து, ஆதார் தொடர்பான சேவைகள் மற்றும் வருவாய்த்துறை, சமூக நலத்துறை சார்ந்த சான்றுகளை பெற விண்ணப்பித்து வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இ-சேவை மையம் முன்பு இருந்த மரம், நேற்று முன்தினம் வேரோடு சாய்ந்து விழுந்தது.