• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் சுயஉதவி குழு பெண்​கள் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்​சம் கோடி வங்கி கடனுதவி வழங்கி தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சாதனை படைத்​துள்​ளது. மகளிர் சுயஉதவி குழுக்​களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவற்​றின் செயல்​பாடு​களுக்​காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் வங்கி கடன் இணைப்​பு​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், கடந்த 2021-22-ம் நிதி ஆண்​டில் 4.08 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.21,392 கோடி​யும், 2022-23-ம் நிதி ஆண்​டில் 4.49 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.25,642 கோடி​யும், 2023-24-ம் நிதி ஆண்​டில் 4.79 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.30,074 கோடி​யும் வங்கி கடனுதவி​கள் வழங்​கப்​பட்டன. அதை தொடர்ந்​து, கடந்த 2024-25-ம் நிதி ஆண்​டில் 4.84 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.35,189 கோடி கடன் வழங்கி தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சாதனை படைத்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *