
ஆக்ரா: ஆக்ராவைச் சேர்ந்த 33 வயது மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகள் காணாமல் போன வழக்கில் தொடங்கப்பட்ட விசாரணையில் அவர்கள் லவ் ஜிகாத் கும்பலால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது அலி உள்ளிட்ட 10 பேர் உத்தர பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மத மாற்றத்துக்காக அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து நிதி திரட்டியது தெரியவந்தது.