• July 22, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 32 லட்சம் வாக்காளர்களை மட்டுமே சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 11,000 பேரை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்பதுடன் அவர்கள் அங்கு வசித்ததாக அண்டை வீட்டாராலும் உறுதி செய்யப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில், அந்த முகவரிகளில் எந்த வீடும் அல்லது குடியிருப்பும் இல்லை. அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக (வங்கதேசத்தினர் அல்லது ரோஹிங்கியாக்கள்) அண்டை மாநிலங்களில் வசித்து வந்திருக்கலாம், எப்படியோ பிஹாரில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *