• July 22, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹரி ஹர வீர மல்லு’ இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ஹரி ஹர வீரமல்லு படத்தில்…

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க மாட்டார் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார்.

ஆனால், திடீரென இன்று நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

அங்கு பேசிய பவன் கல்யாண், ” என் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை உருவாக்க எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு நான் வந்ததற்கு காரணம்.

நான் அவருக்கு பக்கபலமாக நின்று, அவர் எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உலகுக்கு உரைக்க விரும்பினேன். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் தனியாக செய்ததற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Pawan Kalyan
Pawan Kalyan

என் அட்டவணை அரசியல் பணிகளால் நிரம்பியிருந்தது. ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட நிதி அகர்வாலுக்கு நான் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

சமீபத்தில் ஊடகங்களுடன் அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறேன், ஆனால் என் திரைப்படங்களைப் பற்றி இவ்வளவு பேசியதில்லை. பொதுவாக, திரைப்படங்களைப் பற்றி பேசுவதற்கு நான் தயங்குவேன். இது என் ஆணவம் கிடையாது.

என் படங்களை எப்படி விளம்பரப்படுத்துவது, பேசுவது என்று எனக்குத் தெரியாது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். ஏ.எம்.ரத்னம் தெலுங்கு திரைப்படங்களை பான்-இந்திய சந்தைகளுக்கு எடுத்துச் சென்றவர்களில் ஒருவர்.

தமிழ்ப் படங்களை தொடர்ந்து டப் செய்து தெலுங்கு சந்தைகளுக்கு பெரிய அளவில் கொண்டு வந்தவர். ஒரு படத்தை உருவாக்க, பொருளாதார ரீதியாகவும் படைப்பு ரீதியாகவும் பல சிறிய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.

அவரின் அர்ப்பணிப்பைக் கண்டு, என்னால் முடிந்த நேரத்தில் இந்தப் படத்திற்கு என் முழு முயற்சியையும் கொடுத்தேன். இது வெற்றி அல்லது பணத்தைப் பற்றியது அல்ல.

Pawan Kalyan
Pawan Kalyan

கிரிஷ் ஜகர்லமுடி, ஏ.எம்.ரத்னத்துடன் சேர்ந்து இதை ஒரு சிறந்த, உயர்ந்த கருத்து கொண்ட படமாக என்னிடம் கொண்டு வந்தார். சில தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

இருப்பினும், இந்தப் படத்திற்கு அவர் செய்த அடித்தளப் பணிக்கு நான் மனதார நன்றி கூறுகிறேன். இந்தப் படம் இரண்டு கோவிட் அலைகளை சந்தித்து, சில படைப்பு சவால்களை எதிர்கொண்டது.

அரசியலில் நுழைந்த பிறகு, படப்பிடிப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இருப்பினும், ஏ.எம்.ரத்னம் தொடர்ந்து உழைத்து படத்தை முடித்தார்,” எனப் பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *