
மதுரை: ‘விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் மாணவிகள், பெண்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம் நிறைவேற்றப்படும்’ என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி, விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயிற்சி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடியானது.