
சென்னை: அடுத்த மாதத்துடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியல் தயாராகியுள்ளது. இதில் சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காவல் துறையில் 14 டிஜிபி பணியிடங்கள் இருந்தாலும் சட்டம் – ஒழுங்கு டிஜிபியே தலைமை டிஜிபியாகவும், காவல் படை தலைவராகவும் செயல்படுவார். தற்போது பதவியில் உள்ள சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.