
சென்னை: தமிழகத்தில் எம்.பி.,-க்களுக்கு அலுவலகம் கிடைக்காதா? என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:2019-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுமே எம்.பி.க்களுக்கு அண்டை மாநிலங்களைப்போல அலுவலகம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு நான் கோரிக்கை வைத்தேன். ஆட்சி மாற்றம் நடந்த பிறகு திமுக அரசிடமும் கோரினேன்.