
கொச்சி: மாவட்ட நீதித் துறையின் நீதிமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் பொறுப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான கொள்கையை கேரள உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதில், ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது தனியுரிமை உரிமைகளை மீறுதல், தரவு பாதுகாப்பு அபாயங்கள், நீதித் துறை முடிவெடுப்பதில் நம்பிக்கை இழப்பு உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாவட்ட நீதித் துறை அதன் பயன்பாட்டில் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.