• July 21, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்​வர்: ஒடி​சா​வின் புரி மாவட்​டம், பாலங்கா அரு​கே​யுள்ள பயாபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்​தினம் வீட்​டுக்கு அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது மோட்​டார் சைக்​கிள்​களில் வந்த 3 மர்ம நபர்​கள், சிறுமியை வலுக்​கட்​டாய​மாக அழைத்​துச் சென்​று அவர் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து எரித்​தனர்.

சிறுமி​யின் அலறல் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் ஓடி வந்​தனர். இதை பார்த்​ததும் மர்ம நபர்​கள் தப்​பிச் சென்​று​விட்​டனர். பலத்த தீக்காயமடைந்த சிறுமியை மீட்ட கிராம மக்​கள், பிப்​பிலி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். சுமார் 70 சதவீதம் தீக்​கா​யம் அடைந்​துள்ள அவரின் உடல்​நிலை மோசமடைந்​தது. இதைத் தொடர்ந்து நேற்று சிறப்பு ஆம்​புலன்ஸ் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிறுமி அனு​ம​திக்​கப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *