
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த கிராமம் சுற்றுலாத் தலமாகிறது. இதற்காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 24-ல் கொண்டாடப்பட உள்ளது. இதை விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசும் பாஜகவும் தயாராகி வருகிறது.
இச்சூழலில், ஆக்ராவில் உள்ள வாஜ்பாயின் மூதாதையர் கிராமமான படேஷ்வரை ஒரு முக்கிய ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தர பிரதேச சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 101 சிவன் கோயில்கள் உள்ளன. இதை மேம்படுத்தி அங்கு, யாத்ரீக அனுபவத்தை ஏற்படுத்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.