• July 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்​பாய் பிறந்த கிராமம் சுற்​றுலாத் தலமாகிறது. இதற்​காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் பிரதம​ரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்​பா​யின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்​பர் 24-ல் கொண்​டாடப்பட உள்​ளது. இதை விமரிசை​யாகக் கொண்​டாட மத்​திய அரசும் பாஜக​வும் தயா​ராகி வரு​கிறது.

இச்​சூழலில், ஆக்​ரா​வில் உள்ள வாஜ்​பா​யின் மூதாதையர் கிராம​மான படேஷ்வரை ஒரு முக்​கிய ஆன்​மிக மற்​றும் பாரம்​பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தர பிரதேச சுற்​றுலாத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த கிராமத்​தில் மொத்​தம் 101 சிவன் கோயில்​கள் உள்​ளன. இதை மேம்​படுத்தி அங்​கு, யாத்​ரீக அனுபவத்தை ஏற்​படுத்த உ.பி. அரசு முடிவு செய்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *