
திருப்பூர்: தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் வைகோ விவரம் தெரியாமல் பேசுகிறார். பஞ்சாலை தொழிற்சங்க சொத்துகளை எந்தக்கட்சியும் கட்டுப்படுத்த முடியாது என திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரான திருப்பூர் சு.துரைசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் திமுகவிலிருந்து வெளியே வந்தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்துள்ளதாக வைகோ பேசியுள்ளார்.