
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறையும் வரை நீட், உதய் மின்திட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற மறுத்தார். ஆனால் பழனிசாமி நீட் தேர்வை 2017-ல் நடைமுறைக்கு கொண்டுவந்தார்.