
கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள வன்னியர் எம்எல்ஏக்கள், உள் இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது: அனைத்து சமுதாயத்தினருக்கும் இடஒதுக்கீடு கோரி ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடி வருகிறார்.