
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு 8 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் டிசிபி ஷாலினி தீட்சித் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து 10 வயதில் இந்தியாவுக்கு வந்த அப்துல் கலாம் முதலில் மும்பைக்கு வந்து இருபது ஆண்டுகளாக நேஹா என்ற பெயரில் திருநங்கை அடையாளத்தில் அங்கே தங்கியுள்ளார். அங்கு இவர், ஹிஸ்ரா சமூகத்தின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.