
நாகப்பட்டினம்: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நாகை அவுரித் திடலில் நேற்று மாலை பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: திமுக ஆட்சியில் எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. அவரது குடும்பத்தினர் பற்றித்தான் கவலைப்படுகிறார்.