
மயிலாடுதுறை: அரசு வாகனம் பறிக்கப்பட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாகப் பணியாற்றி வந்தவர் சுந்தரேசன். இவர், தான் நேர்மையாகப் பணியாற்றியதால், தனது அரசு வாகனம் பறிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். மேலும், எஸ்.பி.உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதும் புகார் தெரிவித்திருந்தார். காவல் துறை நடத்தை விதிகளை மீறியதால், இவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு மத்தியமண்டல ஐ.ஜி.க்கு, தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் பரிந்துரை செய்திருந்தார்.