
இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.
இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இனிவரும் காலத்தில் இங்கிலாந்தில் இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர்களும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என்றே அழைக்கப்படும்.
இதற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின.
சச்சின் டெண்டுல்கரும் பட்டோடி குடும்பத்தினரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் பெயர் மாற்றம் வாய்திறந்திருக்கிறார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசிய ஆண்டர்சன், “உங்கள் பெயரில் ஒரு கோப்பை இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது முக்கியமல்ல.
ஆனால், இந்த மண்ணில் வாழும் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக நான் பார்க்கும் சச்சின் டெண்டுல்கருடன் கோப்பையில் என்னைப் பார்க்கும்போது என் கால்கள் தரையிலேயே இல்லை என்பது போல உணர்ந்தேன்.

அவரை நான் மிகவும் மதிக்கிறேன். நான் சிறுவனாக இருக்கும்போது அவர் விளையாடுவதைப் பார்த்தேன். பின்பு அவருக்கெதிராகவே விளையாடினேன்.
அவர் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர். தன் கரியர் முழுவதும் ஒரு நாட்டின் பாரத்தைத் தனது தோள்களில் சுமந்துள்ளார்.
எனவே, இதுபோன்ற ஒன்றை அவருடன் பகிர்ந்து கொள்வது ஒரு நம்பமுடியாத மரியாதை” என்று கூறினார்.