• July 20, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக ஆட்சியில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் இருந்தவர் சேலம் ஆர்.இளங்கோவன். எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக சித்தரிக்கப்படும் இவர் மீது திமுக-வுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. இந்தச் சூழலில், 2026-ல் இளங்கோவன் தான் போட்டியிடுவதற்கான தொகுதியை தயார்படுத்தி வருவதாக சேலம் அதிமுக வட்டாரத்தில் பலமான பேச்சு கிளம்பி இருக்கிறது.

2011 தொடங்கி கடந்த மூன்று தேர்​தல்​களாக சேலம் மாவட்​டத்​தில் அதி​முக கூட்​டணி தான் பெரு​வாரி​யான வெற்​றிகளை குவித்து வரு​கிறது. கடந்த முறை, மொத்​தம் உள்ள 11 தொகு​தி​களில் ஒரே ஒரு தொகு​தி​யில் மட்​டுமே திமுக வென்​றது. எஞ்​சிய 10 தொகு​தி​களை அதி​முக கைப்​பற்​றியதற்கு முழு​முதற் காரணம் எடப்​பாடி பழனி​சாமி​யும் சேலம் இளங்​கோவனும் தான். ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு இபிஎஸ் முதல்​வ​ரான போது அதன் பின்​னணி​யில் இருந்து அனைத்து ‘செட்​டில்​மென்ட்​’களை​யும் கவனித்​துக் கொண்​ட​வர் இளங்​கோவன் தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *