• July 20, 2025
  • NewsEditor
  • 0

கோயில்களில் தரிசனக் கட்டணம் மூலம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, பொருளாதார தீண்டாமை திணிக்கப்படுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லஞ்சம் வாங்கிய அறநிலையத் துறை உதவி ஆணையர் இந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அலுவலகங்களில் அதிக ஊழல், முறைகேடு மற்றும் வழக்குகளை சந்திக்கும் துறையாக அறநிலையத் துறை முதலிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. மற்ற துறைகளில் மக்களுக்கு சாதகமாக முறைகேட்டில் ஈடுபடத்தான் லஞ்சம் வாங்குவார்கள். ஆனால், இந்து சமய அறநிலையத் துறையில் கோயிலுக்கு தானமாக கொடுப்பதற்கு மக்களிடம் லஞ்சம் வாங்கும் விநோதத்தை இங்குதான் பார்க்க முடியும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *