• July 20, 2025
  • NewsEditor
  • 0

சக அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரிக்கு சார்ஜ் மெமோ வழங்கிய நிலையில், அந்த அதிகாரி மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை மீறி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பெண் அதிகாரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், தமிழக வேளாண் துறை வணிக பிரிவு ஆணையர், காஞ்சிபுரம் துணை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வேளாண் வர்த்தக பிரிவு அதிகாரியாக பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், தன்னை காஞ்சிபுரத்தில் பணியாற்றும் உதவி வேளாண் அதிகாரியும், துணை இயக்குநரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது உரிய உள் விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கவில்லை எனக்கூறி அந்த பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *