
திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யவில்லை என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வேதனையில் கொந்தளித்து வருகின்றன.