
பனாஜி: கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பெண்ணின் முன்னாள் கணவர் ட்ரார் கோல்ட்ஸ்டீன், தங்களின் இரு மகள்களின் ஆரோக்கியம், மனநலம் பற்றி தான் அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த டிசம்பரில் அவர் போலீஸில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில் இவ்வாறாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ட்ரார் கோல்ட்ஸ்டீன் அளித்த காவல் துறை புகாரில், “நானும் நினாவும் 2017-ல் சந்தித்தோம். எல்லாம் நன்றாகவே சென்றது. ஆனால் சில காலத்தில் அவர் என்னிடமிருந்து விலக ஆரம்பித்தார். குழந்தைகளையும் என்னிடமிருந்து தள்ளியே வைத்தார்.