
புதுடெல்லி: “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்து பெரும்பான்மை இருப்பதால், சிறுபான்மையினர் முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பெற்று வருகின்றனர்” என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கிரண் ரிஜிஜு, “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவில் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் எனவே நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் கூறும் சிறுபான்மையினர் ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆதரவு பெற்ற இடதுசாரி சுற்றுச்சூழல் அமைப்பு, இந்தியாவில் சிறுபான்மையினர் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், அடித்துக்கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. இதுபோன்ற ஒரு கதையை கட்டமைப்பது நாட்டுக்கு உதவாது.