
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக காங்கிரஸ் கூட்டியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ல் தொடங்குகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளது.