
இடுக்கி: கேரளாவில் காரிமனூர் அருகே உள்ள வாடகை வீட்டில் தனது மைனர் மகளை மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் தந்தை. இந்தநிலையில், அந்த சிறுமி 8 வயதாக இருந்தபோது வயிற்றுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனது தாயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின்படி, அவள் 1-ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு. இடுக்கி விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.