
புதுடெல்லி: கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா.
இவரது வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டபோது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூ.500 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.