
சென்னை: திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை சரிவர அள்ளப்படாத காரணத்தால் சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கொசுக்களை அழிப்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை.