
சென்னை: சென்னை ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை, ராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள பால் டிப்போ பகுதியில் தண்டையார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் சதுரஅடி நிலத்தில் 159 குடும்பங்கள் வசித்துவருகின்றன.