
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவிடம் பணம் வாங்கியபோதே அவர்களது கதை முடிந்துவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பொதுமக்களிடையே நேற்று பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில்தான் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்கள்.