
சென்னை: காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விரைவில் தொடங்க உள்ள மக்களவை கூட்டத்தொடரில், மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவது தொடர்பாக, திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பி. டி.ஆர். பாலுவுடன், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.