
சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வரும் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து மின்வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு டிச. 1-ம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக ஊதிய திருத்தத்துக்கான பேச்சுவார்த்தை குழு தலைவர் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தை ஜூலை 24-ம் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் சங்கங்கள் சார்பில் தலா 3 பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.