
சென்னை: சேரக்கூடாத இடத்தில் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாகவும், அதனால் பழனிசாமியின் அழைப்பை நிராகரிக்கிறோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நடந்த அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களது கூட்டணிக்கு வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம் என பேசினார்.