• July 18, 2025
  • NewsEditor
  • 0

நன்னிலம்: “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? ‘அப்பா’ என்று சொன்னால் மட்டும் போதுமா?” என்று திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையம் பகுதியில் தொண்டர்கள், மக்கள் மத்தியில் பேசியது: “இந்த மாவட்டம், செழிப்பான விவசாய மாவட்டம். இந்த மண் புனிதமான மண். இரவு, பகல், வெயில், மழையில் உழைத்து உணவு உற்பத்தி செய்கிறார்கள். எது வேண்டுமானாலும் இல்லாமல் இருக்கலாம், உணவில்லாமல் இருக்க முடியாது. அதனை உருவாக்கும் விவசாயிகள் இந்த மாவடத்தில் வாழ்வதும் அங்கு நான் இருப்பதும் பெருமையாக உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *