
புதுடெல்லி: “இந்தியாவின் அடுத்த விண்வெளி வீரர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணம் செய்வார்” என விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
அவர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா, ஆக்ஸியாம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்தில் 3 வார காலம் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு பூமி திரும்பியுள்ளார். அமெரிக்க வீராங்கனை பெக்கி விட்சன் டிராகன் விண்கலத்தின் கமாண்டர். ஷுபான்ஷு சுக்லா பைலட்டாக சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வு முக்கியமானது.