
புதுடெல்லி: நரேந்திர மோடியின் தலைமை இருந்திருக்காவிட்டால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்காது என்று அக்கட்சியின் எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "நரேந்திர மோடி தற்போது 3-வது முறையாக பிரதமராக உள்ளார். மோடியின் தலைமை இருந்திருக்காவிட்டால், பாஜக 150 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்காது. மோடி வந்தபோது, பாஜகவுக்கு அதுவரை வாக்களிக்காத பிரிவினர் குறிப்பாக ஏழை மக்கள், அதிக அளவில் பாஜக பக்கம் திரும்பினர். காரணம், அவர்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. சிலர் இதை விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை.