
மதுரை: மதுரை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் காவலராக உள்ள கணவர், காவல் ஆய்வாளராக உள்ள மாமனார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தங்கப்பிரியா (32). பிஎஸ்சி, பிஎட் பட்டதாரி இவருக்கும், மதுரை காதக்கிணறு செந்தில்குமரன் மகன் பூபாலனுக்கும் 2018-ல் திருமணம் நடந்தது. பூபாலன் மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிகிறார்.