
புதுடெல்லி: 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் சர்வதேச ஐக்கிய நாடுகள் இயக்கம் -2025 மாநாட்டை நொய்டாவில் தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல், "2022 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமான காலகட்டம் என்றும், இந்த அமிர்த காலத்தில் நாம் அனைவரும் இணைந்து 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதை கருத்தில் கொண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும்.