
புதுடெல்லி: ஸ்வச் சர்வேக் ஷன் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 2024-25-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் நாட்டின் தூய்மையான நகரங்களில், ம.பி.யின் இந்தூர் 8-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும் மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.