
சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு அளித்த மனு மீது பன்னிரெண்டு வாரங்களில் முடிவெடுக்க மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.