
பெங்களூரு: பெங்ளூருவில் உள்ள 15 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள 15 தனியார் பள்ளிகளுக்கு “roadkill333@atomicmail.io.” என்ற ஒற்றை மின்னஞ்சல் மூலம் இன்று காலை 7.31 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து சில பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. சில பள்ளிகள் மாணவர்களை வெளிப்பகுதியில் காத்திருக்கும்படி அறிவுறுத்தின.