
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின.