• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 650 பூங்​காக்​களை ரூ.75 கோடி​யில், 3 ஆண்​டு​களுக்கு பராமரிக்​கும் பணி​ தனியாரிடம் வழங்​கப்பட​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் 2021-ம் ஆண்​டுக்கு முன்பு 704 பூங்​காக்​களும், 610 விளை​யாட்டு அரங்​கு​களும் இருந்​தன. கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.81 கோடி​யில் 204 பூங்​காக்​கள் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்​ளன. ரூ.24 கோடி​யில் 37 பூங்​காக்​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

சென்​னை​யில் தற்​போது 908 பூங்​காக்​களும், 724 விளை​யாட்டு அரங்​கு​களும் பொது​மக்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. மேலும் ரூ.8 கோடி​யில், 32 புதிய பூங்​காக்​கள் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. 2025- 26 நிதி​யாண்​டில் ரூ.60 கோடி​யில் 30 புதிய பூங்காக்கள் அமைக்​கப்பட உள்​ளன. 200-க்​கும் மேற்​பட்ட பூங்​காக்​கள் ரூ.30 கோடி​யில் மேம்​படுத்​தப்பட உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *