• July 18, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மும்​பை​யில் வசிக்​கும் ஒரு தம்​ப​திக்கு அமெரிக்​கா​வில் உறவினர்​கள் உள்​ளனர். கடந்த 2019-ம் ஆண்டு உறவினர்​களுக்கு அமெரிக்​கா​வில் பிறந்த குழந்​தையை ஒரு சில மாதங்​களி​லேயே இவர்​கள் இந்​தியா அழைத்து வந்து விட்​டனர்.

இந்​நிலை​யில் அமெரிக்க குடி​யுரிமை பெற்ற அந்த குழந்​தையை தாங்​கள் தத்​தெடுக்க அனு​ம​திக்க வேண்​டும் என மும்பை தம்​பதி உயர் நீதி​மன்​றத்​தில் மனு அளித்​தது. இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் ரேவதி மொஹிதி தேரே மற்​றும் நீலா கோகலே ஆகியோர் விசா​ரித்து அளித்த தீர்ப்​பில் கூறிய​தாவது: சிறார் நீதி மற்​றும் தத்​தெடுத்​தல் ஒழுங்​கு​முறை சட்​டத்​தின் கீழ், இந்த குழந்தை தற்​போது பாது​காப்பு அளிக்​கப்பட வேண்​டிய சூழலிலோ அல்​லது சட்ட சிக்​கலிலோ இல்​லை. உறவினர்​களின் குழந்​தை​யாக இருந்​தா​லும், வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்ற குழந்​தையை தத்​தெடுக்க இங்​குள்ள சட்​டத்​தில் இடம் இல்​லை. அமெரிக்க குழந்​தையை தத்​தெடுக்க மனு​தா​ரர்​களுக்கு அடிப்​படை உரிமை இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *