• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தமிழகத்​தில் ஆசிரியர்​கள் எப்​போ தெல்​லாம் போராட்​டம் நடத்​தி​யிருக்​கிறார்​களோ, அப்​போதெல்​லாம் ஆட்சி மாற்றம் ஏற்​பட்​டுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்தார். தமிழகத்​தில் அரசு பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணி நியமனம் செய்யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​தி நேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யுள்​ளபடி தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி, சென்​னை​யில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். 10-வது நாளான நேற்று டிபிஐ வளாகம் முன்பு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை, போலீ​ஸார் கைது செய்து திரு​வல்​லிக்கேணி​யில் உள்ள சமூகநலக்​கூடத்​தில் அடைத்து வைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *